Advertisement

கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றங்களை செய்தது ஐசிசி; விவரம் இதோ!

சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் 3 அடிப்படை விதிகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 15, 2023 • 22:32 PM
ICC have Three new changes announced to the Playing Conditions ahead of the WTC23 final!
ICC have Three new changes announced to the Playing Conditions ahead of the WTC23 final! (Image Source: Twitter)
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது காலத்தின் வளர்ச்சிகேற்ப அடிப்படை விதிமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலுவையில் இருக்கும் அடிப்படை விதிமுறைகளில் 3 புதிய மாற்றங்கள் செய்யப்படுவதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இது பற்றி சௌரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி பரிந்துரைகளின் படி இந்த புதிய மாற்றங்கள் வரும் ஜூன் 1இல் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி மற்றும் ஜூன் 7இல் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்துநடைமுறைக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Trending


அதன்படி, தற்போது களத்தில் இருக்கும் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை மறுபரிசலைகளை செய்ய டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதை பயன்படுத்தி டிஆர்எஸ் எடுக்கும் போது களத்தில் இருக்கும் நடுவர் 3ஆவது நடுவரிடம் சோதிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு முன்பாக தம்முடைய தீர்ப்பை (சாப்ஃட் சிக்னல்) இணைத்து மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைப்பார்.

அதைத் தொடர்ந்து 3ஆவது நடுவர் சோதிக்கும் போது என்ன தான் டெக்னாலஜியை பயன்படுத்தினாலும் தெளிவான ஆதாரம் கிடைக்காத சமயங்களில் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை அப்படியே மீண்டும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பு திருப்தியளிக்காத காரணத்தாலேயே மறுபரிசலனை செய்யப்படும் போது மீண்டும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டால் பின்னர் எதற்கு டிஆர்எஸ்? என்று சமீப காலங்களில் வெற்றியை தலைகீழாக மாற்றிய முக்கிய தருணங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

அதை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி இனிமேல் ரிவியூ செய்யும் போது நேரடியாக அதை 3ஆவது நடுவர் தான் சோதிப்பார் என்றும் களத்தில் இருக்கும் நடுவர்கள் எந்த தீர்ப்பையும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் அறிவித்துள்ளது. மேலும் இனிமேல் ரிவ்யூ செய்யும் போது களத்தில் இருக்கும் நடுவர்கள் எந்த தீர்ப்பும் வழங்காமல் அது பற்றி 3ஆவது நடுவரிடம் ஆலோசிப்பார்கள் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

அதே போல ஆபத்தான இடங்களில் நிற்கும் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரை பேட்ஸ்மேன் எதிர்கொள்ளும் போது, ஸ்டம்ப்களுக்கு அருகே விக்கெட் கீப்பர் நிற்கும் போது, பேட்ஸ்மேனுக்கு அருகே ஃபீல்டர் நிற்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பந்துவீச்சாளர் நோபால் வீசினால் அதற்கு தண்டனையாக வழங்கப்படும் ஃப்ரீ ஹிட் பந்தை பேட்ஸ்மேன்கள் அடிக்காமல் தவற விட்டு கிளீன் போல்டானால் அந்த சமயத்தில் எடுக்கப்படும் ரன்கள் இனிமேல் உதிரிகளில் (எக்ஸ்ட்ராஸ்) சேர்க்கப்படாமல் நேரடியாக பேட்ஸ்மேன் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement