
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன.
இந்த நிலையில் 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஐசிசி உத்தரவின் படி செப்டம்பர் 28ஆம் தேதிக்கு முன்னதாக இந்த அணி 15 வீரர்கள் என்ற அளவில் குறைக்கப்படும். ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் என நட்சத்திர பட்டாளங்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.