
ICC Neglected rohit Sharma picture on T20 WC 2022 promotional poster (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.
இந்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன் படங்களையும் ஐசிசி பதிவிட்டுள்ளது. ஆனால் அதில் இந்திய அணியை குறிக்கும் விதமாக விராட் கோலியின் புகைப்படத்தை போட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஐசிசி இன்னும் விராட் கோலி தான் கேப்டன் என்பது போல் சித்தரித்து இருப்பதாக ரோஹித் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.