டி20 உலகக்கோப்பை 2022: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ஐசிசி புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.
இந்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன் படங்களையும் ஐசிசி பதிவிட்டுள்ளது. ஆனால் அதில் இந்திய அணியை குறிக்கும் விதமாக விராட் கோலியின் புகைப்படத்தை போட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஐசிசி இன்னும் விராட் கோலி தான் கேப்டன் என்பது போல் சித்தரித்து இருப்பதாக ரோஹித் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
One of the posters for the T20 World Cup 2022. pic.twitter.com/nAVUZunV6o
— Johns. (@CricCrazyJohns) February 8, 2022
இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி ரசிகர்கள், அணியின் ஸ்டார் வீரர்களை மட்டும் தான் ஐசிசி போஸ்டரில் வெளியிட்டுள்ளதாகவும், விராட் கோலி தான் ஸ்டார் என்பதால் அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும் விமர்சித்துள்ளனர். இதனால் யார் ஸ்டார் வீரர் என்று இரு வீரர்களின் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now