
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அதிரடி வீரர் குயின்டன் டி காக் 3 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 10 ரன்களுக்கும் மற்றும் ரஸ்ஸி வேண்டர் டுசென் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.