-mdl.jpg)
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்த நிலையில் தது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த அப்துல்லா ஷஃபிக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும், 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.