டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஐசிசி!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு சரியாவ உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ICC official reacts after unhappy Team India skips lunch, heads back to hotel in Sydney in T20 World (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடக்கமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனையடுத்து இந்திய அணி தனது 2ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த இந்திய வீரர்கள் நேற்று மதியம் உணவை அங்கு புறக்கணித்தனர். மேலும் டி20 உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களில் உபசரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இதுமட்டுமல்லாமல் சிட்னி மைதானத்தில் இருந்து ஹோட்டல் அறை 42 கிமீ தூரம் இருப்பதால் இன்றைய பயிற்சியையும் முழுவதுமாக ரத்து செய்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் குற்றச்சாட்டுக்கு ஐசிசி பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி அதிகாரி ஒருவர், பயிற்சியை முடித்த பிறகு உணவு சரியில்லை என இந்திய வீரர்கள் எங்களிடம் நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளோம். உண்மை தெரிந்த பின்னர் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, உணவு மற்றும் தூரத்தை ஒரு பிரச்சினையாக கொண்டு இந்தியா முழு பயிற்சியையும் ரத்து செய்திருக்க கூடாது என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். முதல் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடியுள்ளது. எனவே இதில் இந்திய அணி மிகவும் ஜாக்கிரதையாக விளையாட வேண்டியது அவசியமாகும்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News