
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அண்டர் 19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஸ்டீவ் ஸ்டோக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டோக் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் டீகர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பிரிட்டோரியஸ் - ரிச்சர்ட் செலெட்ஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 76 ரன்கள் எடுத்திருந்த பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடந்து ஆலிவர் வைத்ஹெட் 26 அன்களிலும், திவான் மரைஸ் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களை எடுத்திருந்த ரிச்சர்டும் ஆட்டமிழந்தார்.