
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இருவரும் மோதியபோது பாகிஸ்தான அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தியது. இதனால் பதிலடி தர வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான அணி இரண்டு தொடக்க வீரர்களை நம்பியே இருக்கின்றனர். பாபர் ஆசாம்,முகமது ரிஷ்வான் ஆகியோர் ஓப்பனிங்கில் களம் இறங்கி அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை தருவார்கள். அதன் பிறகு ஃபக்கர் சமான் உள்ளிட்ட வீரர்கள் களத்திற்கு வந்து ரன் குவிக்க முயற்சி செய்வார்கள்.
பாகிஸ்தான் எப்படி போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்து, அதன்படி விளையாடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் தொடக்க வீரர்களான பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும்.