
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை பட்டியல் கடந்த வாரத்தில் உலகக் கோப்பைக்கு நூறு நாட்கள் இருக்கும் பொழுது வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது ஒன்பது லீக் ஆட்டங்களை 9 மைதானங்களுக்கு பறந்து பறந்து விளையாடுகிறது.
இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் 15 பேர் கொண்ட அணியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிக முக்கியமான இடம் இருக்கும். எனவே இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக யார் இடம் பெறுவார்கள் என்கின்ற பேச்சு தற்பொழுது எழுந்திருக்கிறது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவர் இருக்கிறார்கள்.
லெக் ஸ்பின்னர் ஆக சாகல் இருக்கிறார். சைனா மேன் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால் இந்தக் கூட்டணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் இல்லை. மேலும் தற்போதைய இந்திய அணியை எடுத்துக் கொண்டால் பகுதி நேர ஆப் பின்னரும் இல்லை. இதனால் தற்போதைய உலகக் கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் அளிக்க வேண்டுமா? என்பது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.