Advertisement

கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!

கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்திற்குள் மோதிக்கொண்டது விவகாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் காட்டமான கருத்தை முன் வைத்திருக்கிறார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 04, 2023 • 11:44 AM
'If BCCI decides to ban Kohli, Gambhir...': Sehwag!
'If BCCI decides to ban Kohli, Gambhir...': Sehwag! (Image Source: Google)
Advertisement

ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி முடிந்தபிறகு இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் நேரத்தில் பல்வேறு சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. குறிப்பாக கம்பீர் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியதோடு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர்கள் இருவருடனும் இந்திய அணியில் விளையாடியுள்ள முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சண்டையிட்டுக் கொண்ட விவகாரத்திற்கு கடுமையான கருத்தை முன்வைத்து, மோசமான உதாரணம் என்றும் பேசியுள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய அவர், “போட்டி முடிந்த பிறகு நான் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு படுக்கச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் சமூக வலைதளங்களில் பார்த்தபிறகு இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொண்டேன். தோல்வியைப் பெற்ற அணியினர் அதை ஒப்புக்கொண்டு சென்றுவிட வேண்டும். வெற்றி பெற்ற அணியினர் சில நேரங்களில் இப்படித்தான் கொண்டாடுவார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இப்படி முன்கோபம் வெளிப்படுத்தக் கூடாது.

விராட் கோலி கம்பீர் இருவரும் இந்திய அணியின் “ஐகான்” வீரர்கள். இளம் வீரர்களுக்கு இவர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். ‘என்னுடைய ரோல் மாடல் இப்படி செய்கிறார். நானும் செய்கிறேன்.’ என்று பலரும் இதில் இறங்கக்கூடும். மோசமான உதாரணமாக நீங்கள் இருந்துவிடக்கூடாது. ஏற்கனவே இதுபோன்று பலமுறை நடந்திருக்கிறது. பிசிசிஐ இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆரம்பத்திலேயே தடை செய்திருந்தால் மற்றவர்கள் இதில் இறங்குவதற்கு யோசிப்பார்கள். 

அமைதியாக சென்றுவிடுவார்கள். உங்களுடைய சண்டை சச்சரவை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் மைதானத்தில் பலரும் இருக்கும் பொழுது வெளிப்படுத்தினால் அது விளையாட்டுக்கு நீங்கள் செய்யும் நியாயமாக ஒன்றாக இருக்காது. விளையாட்டுக்கு செலுத்தும் மரியாதையாகவும் இருக்காது. இனி இது போன்ற நடந்துவிடாமல் இருக்க பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும் சரி” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement