Advertisement
Advertisement
Advertisement

பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் - சாபா கரீம்!

பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் அணியில் தனது வாய்ப்பிற்காக காத்திருப்பது அவரை ஒரு முதிர்ச்சி அடைந்த வீரராக மாற்றும் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 01, 2023 • 19:57 PM
If Prithvi Shaw stays with the team then it will build discipline inside him: Saba Karim
If Prithvi Shaw stays with the team then it will build discipline inside him: Saba Karim (Image Source: Google)
Advertisement

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி யார் தொடரை வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக நடைபெற்று வருகிறது. 

முதல் இரண்டு போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டியின் ஆடுகளத்தின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது .

Trending


இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்தே இந்திய அணி ஷுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக பயன்படுத்தி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் இந்த இருவரும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை . இதனால் மூன்றாவது டி20 போட்டியில் கில்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பிரீத்தி ஷா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் கில் மற்றும் இஷான் கிசான் இவர்கள் இருவருமே மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க வீரர்களாக ஆட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக பேசிய அவர்,  ” ப்ரித்வி ஷாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயமே . அவர் ஒரு திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை . அணிக்கான சூழ்நிலையுடன் பயணிப்பது அவரை ஒரு சிறந்த வீரராக மேம்படுத்தும் . மேலும் ராகுல் டிராவிட்டின் கண்காணிப்பின் கீழ் இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு அவர் நல்ல திறமையான வீரராக வர இது உதவும்.

கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர்தான் இந்த போட்டியிலும் தொடர்ந்து ஆட வேண்டும் என நான் கருதுகிறேன் . அவர்கள் இருவருக்கும் இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் . ஐந்து அல்லது ஆறு போட்டிகளைக் கொண்டு அவர்களை நாம் முடிவு செய்யக்கூடாது . தற்போது இன்று நடைபெறும் போட்டியில் அவர்கள் இருவரும் அதிகமான ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவலாம். அதன் மூலம் துவக்க வீரர்களுக்கான பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரலாம் . அதனால் தற்போது துவக்க வீரர்களாக ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சில போட்டிகளிலும் வாய்ப்பு அளிப்பது முக்கியமானது.

பிரீத்வி ஷா இன்னும் சிறிது காலம் அணியில் தனது வாய்ப்பிற்காக காத்திருப்பது அவரை ஒரு முதிர்ச்சி அடைந்த வீரராக மாற்றும். அவரை கட்டாயம் இந்த போட்டியில் ஆட வைத்தே ஆக வேண்டும் என்ற எந்த தேவைகளும் இருப்பதாக தெரியவில்லை” என தெரிவித்திருந்தார். அவர் கூறியதைப் போலவே இன்றைய போட்டிலும் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement