
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என பின் தங்கியிருக்கிறது. இந்திய அணியின் தோல்வியை விட ரசிகர்களுக்கு பெரிய கவலையாக இருப்பது, சஞ்சு சாம்சனை அணிக்குள் சேர்க்காமல் ஒதுக்கி வைத்திருப்பது தான்.
இதுகுறித்து விளக்கம் தந்திருந்த இந்திய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணியின் பிளேயிங் 11இல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதை விட, பவுலிங்கும் தெரிந்த ஒரு நல்ல ஹிட்டர் தேவை. எனவே பவுலிங் வேண்டும் என்ற காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறுகின்றனர். இதை ரசிகர்களும் ஏற்காமல் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆகாஷ் சோப்ரா முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். அதில், “இந்திய அணியில் முன்பெல்லாம் டாப் ஆர்டரில் அதிரடி காட்டிய சேவாக், யுவ்ராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் பவுலிங் வீசுவார்கள். ஆனால் தற்போது டாப் ஆர்டரில் இருந்தாலே பந்துவீசுவதில்லை. வலைப்பயிற்சியில் முயற்சி செய்துக்கூட பார்ப்பதில்லை.