
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு பென் டங்க் மற்றும் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாய் ஹோப் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய பென் டங்க் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 22 ரன்களிலும், கேப்டன் சிக்கந்தர் ரசா 27 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 28 ரன்னிலும் என அடுத்தடுத்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் அந்த அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கிய ஷாய் ஹோப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வாரியர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.