மாஸ்டர்ஸ் லீக் 2025: சங்கக்காரா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

மாஸ்டர்ஸ் லீக் 2025: சங்கக்காரா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி! (Image Source: Google)
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
பின்னர் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த கையோடு பில் மஸ்டர்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் டேரன் மேடி 15 ரன்களையும், டிம் பிரஸ்னன் 18 ரன்களையும், கிறிஸ் ட்ரெம்லெட் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதனா, பெரேரா, குணரத்னே உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் குமார் சங்கக்காரா - ரமேஷ் களுவிதாரண இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சங்கக்காரா ஒருமுனையில் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களுவிதாரண 16 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் குமார் சங்கக்காரா 46 ரன்களில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricketமேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குமார் சங்கக்காரா 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 106 ரன்களையும், அசெலா குணரத்னே 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News