
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடும் அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதியன்று தாக்கா நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அப்போது இந்திய அணியில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்படுவதை கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் அறிமுகமாக களமிறங்கிய நிலையில் சபாஸ் அஹமத், ஷார்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர் என 4 நல்ல ஆல் ரவுண்டர்கள் இடம் பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார்.