
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.இளம் வீரர் இஷான் கிஷன் 210 ரன்கள் விளாச விராட் கோலி தனது 44 வது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 409 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து வங்கதேச அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வையை தழுவியது.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே எல் ராகுல், “இது போன்ற செயல்பாட்டை தான் இந்திய அணியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள். விராட் கோலியும், இஷான் கிஷனும் எங்களுக்கு இந்த வெற்றியை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எப்போதும் ஸ்கோர் போர்டு நாங்கள் எப்படி ஆட்டத்தை தொடங்கினோம் என்று சொல்லாது. இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டார்.