-mdl.jpg)
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஓப்பனிங் வீரர்கள் கேஎல் ராகுல் 57 , ரோஹித் சர்மா 43, விராட் கோலி 49, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17 என அடுத்தடுத்து ரன்களை விளாசினர். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 237 ரன்களுக்கு 3 விக்கெட்களை குவித்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்கமே அதிர்ச்சி தான். கேப்டன் பவுமா மற்றும் ரூசோ ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகினர். ஐய்டன் மர்க்ரம் 33 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் அந்த அணி 49 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்தது. அந்த அணி 100 ரன்களை கூட அடிக்காது என்று இருந்த சூழலில் அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. 3ஆவது விக்கெட்டிற்கு பின் ஜோடி சேர்ந்த மில்லர் - டிகாக் ஜோடி இந்திய பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர்.