Advertisement

இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!

தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 02, 2023 • 21:40 PM
IND v SL: Pandya assures his players he will give them chances and back them to the core
IND v SL: Pandya assures his players he will give them chances and back them to the core (Image Source: Google)
Advertisement

இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. இத்தொடர் முடிந்த உடன் நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்து இலங்கைக்கு எதிரான முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடும்.

முதலில் தொடங்கும் டி20 தொடர் ஜனவரி 3, 5, 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த டி20 தொடரில் இந்திய இளம் டி20 அணிதான் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ஹார்திக் பாண்டியா டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி கொடுத்து, தனது கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

Trending


இதனால், இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இலங்கை அணி ஆசியக் கோப்பையில் இந்தியா வீழ்த்தி கெத்து காட்டியிருந்தார்கள். இதனால், இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். இந்நிலையில், இந்த இலங்கை தொடருக்கு முன், கேப்டன் ஹார்திக் பாண்டியா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, இந்த வருடத்தில் உங்களது குறிகோள் என்ன? என நிரூபர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஹார்திக், “இந்தாண்டில், இந்திய அணிக்காக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுகொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது குறிகோளாக இருக்கும். அதற்காக கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்வேன்” எனக் கூறினார்.

அடுத்து, நீங்கள் எப்போது டெஸ்ட் அணிக்கு திரும்புவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். இதில் சிறப்பாக செயல்பட்ட திருப்தி கிடைத்தால், அடுத்து டெஸ்ட் அணியில் இடம்பெற முயற்சி செய்வேன்” என ஹார்திக் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி எப்படி தயாராகும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹார்திக், “கடந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன், இந்திய அணி அனைத்து வீரர்களும் வாய்ப்பு கொடுத்தது. மேலும், இருதரப்பு தொடர்களிலும் அபாரமாக செயல்பட்டு அசத்தினோம். ஆனால், டி20 உலகக் கோப்பையில் வேறு மாதிரியாக விளையாடினோம். அதற்கு காரணம், காயங்கள்தான். சில வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இம்முறை காயத்தால் யாரும் விலகவில்லை என்றாலே போதும். புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை” எனக் கூறினார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹார்திக், “முடிந்தவரை அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அது நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement