
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 0 என்ற கைப்பற்ற நிலையில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஒருநாள் தொடரை காட்டிலும் டி20 தொடரில் வலுவான அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவிக்க அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் மட்டுமே குவிக்க 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமான அணி சேசிங்கில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய ஒன்று. அந்த அணியில் ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஆனாலும் அதே போன்று சேசிங்கிலும் நமது அணி தற்போது நல்ல பலத்துடன் உள்ளது.