-mdl.jpg)
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ராய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்றைய போட்டிகான இந்திய அணியில் நான்கு மாற்றங்களும், ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய அணியின் துணைக்கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிற்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.