Advertisement

BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் அதிரடி; வலுவான நிலையில் இந்தியா!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில்  இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan December 14, 2022 • 16:48 PM
IND vs BAN: Pujara, Iyer Steady Indian Innings; Score 278/6 At Stumps On Day 1 Against Bangladesh
IND vs BAN: Pujara, Iyer Steady Indian Innings; Score 278/6 At Stumps On Day 1 Against Bangladesh (Image Source: Google)
Advertisement

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடந்துவருகிறது.  ஐசிசி டெஸ்ட்  சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க, வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதால் வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானத்தை காட்ட முயற்சித்தாலும் தவறான ஸ்வீப் ஷாட் அடித்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த விராட் கோலி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Trending


அதனால் 48/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை மறுபுறம் நின்ற சட்டேஸ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடி 4ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த ரிஷப் பண்ட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து அவுட்டனர். 

அந்த நிலையில் வந்த ஸ்ரேயஸ் ஐயர் மறுபுறம் இருந்த புஜாராவுடன் இணைந்து நங்கூரமாக நின்று இந்தியாவை வலுப்படுத்தும் வகையில் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல வங்கதேச பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இருபுறமும் ரன்களை குவித்த இந்த ஜோடி தேநீர் இடைவேளையை கடந்து விக்கெட் விடாமல் 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியது. 

குறிப்பாக 203 பந்துகளை எதிர்கொண்டு சதத்தை நெருங்கிய புஜாரா துரதிஷ்டவசமாக 11 பவுண்டரியுடன் 90 ரன்களில் கடைசி நேரத்தில் போல்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக பேட்டிங் செய்த நிலையில் அடுத்து வந்த அக்சர் பட்டேல் 2 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் மெஹிதி ஹசனிடம் அவுட்டானார்.

அதனால் கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 278/6 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் 10 பவுண்டரியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களில் இருக்கும் நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது சதத்தைப் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement