
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இப்போட்டிகான இந்திய அணியில் ராஜத் பட்டிதாரும், இங்கிலாந்து அணியில் சோயப் பஷீரும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களைச் சேர்த்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 179 ரன்களைச் சேர்த்து இரட்டை சத்தை நெருங்கிவருகிறார். அதேசமயம் மற்ற எந்தவொரு பேட்டர்களும் 50 ரன்களைக் கூட தாண்டவில்லை.
அதிலும் குறிப்பாக் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அறிமுக வீரர் சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.