
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்து சென்றுவிட்டது. இதனிடையே, நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மோதியது.
இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதனையடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக சுப்மன் கில்லுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் 6 முதல் 8 வாரங்களுக்கு விளையாட முடியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும் ராகுல் திராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.