
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் யாருமே 20 ரன்களை அடிக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 19, சாப்மேன் 14, பிரேஸ்வெல் 14 ஆகியோர்தான் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 99/8 ரன்களை மட்டும்தான் சேர்த்தது. ஷிவம் மாவியை தவிர அனைத்து பௌலர்களும் விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் 11, இஷான்கிஷன் 19 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.