Advertisement

விராட் கோலியை தூக்கிவைத்து கொண்டாடிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!

போட்டி முடிவை எட்டியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் ஓடிவந்த விராட் கோலியை கட்டித்தழுவி தனது பாராட்டை தெரிவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 23, 2022 • 18:36 PM
Ind Vs Pak Rohit Sharma And Virat Kohli Specail Bonding Watch Video
Ind Vs Pak Rohit Sharma And Virat Kohli Specail Bonding Watch Video (Image Source: Google)
Advertisement

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் புவிக்கு எதிராக நிதானமாக விளையாடியதால், அர்ஷ்தீப் சிங்கை அடித்து ஆட முயற்சி செய்தனர். அப்போது அர்ஷ்தீப் அபாரமாக புவுன்ஸ், ஸ்விங் பந்துகளை வீசியதால் பாபர் அசாம் 0, முகமது ரிஸ்வான் 4 இருவருமே இவரிடம் விக்கெட்களை பறிகொடுத்தனர்.

Trending


இதனால், பாகிஸ்தான் அணி 4 ஓவர்களில் 15/2 எனத் திணறியது. இதனைத் தொடர்ந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் ஆகியவை குறைந்ததால், அடுத்து வந்த ஷான் மசூத், இப்டிகார் அகமது இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் அடிக்கடி பவுன்சர்களை பயன்படுத்தி அசத்தினார்கள். இதனால், 10 ஓவர்கள் முடிவில் 60/2 ரன்கள் மட்டுமே சென்றது.

இதனைத் தொடர்ந்து ஷான் மசூத் 52 , இப்டிகார் அகமது 51 ஆகியோர் அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க விரகள் கே.எல்.ராகுல் 4 (8), ரோஹித் ஷர்மா 4 (7) ஆகியோர் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 15 (10) ஆட்டமிழந்தப் பிறகு அக்சர் படேல் 2 (3) ரன் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். இறுதியில் 3 ஓவர்களில் 48 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, ஷாஹீப் அஃப்ரீடிக்கு எதிராக கோலி 3 பவுண்டரிகளை அடித்து 17 ரன்களை சேர்த்தார்.

அடுத்து 12 பந்துகளில் 31 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது ஹரிஸ் ரௌப்க்கு எதிராக கோலி இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணியில் ஸ்பின்னர் முகமது நவாஸுக்கு மட்டுமே ஓவர் இருந்தது. முதல் பந்தில் ஹார்திக் பாண்டியாவை 40 வெளியேற்றினார். அடுத்து தினேஷ் கார்த்திக் வந்து சிங்கில் எடுக்க கோலி 2 ரன்களை அடித்தார். 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19.4ஆவது பந்தில் கோலி சிக்ஸர் அடித்தார். அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.

இறுதியில் 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது ஒயிட் வீசப்பட்டது. அடுத்த பந்தில் 3 ரன்கள் சென்ற நிலையில் 5ஆவது பந்தில் தினேஷ் கார்த்திக் 1 அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் ஒயிட் வீசப்பட்டது. கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் அடித்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 160/6 ரன்களை சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. கோலி 82 (53) கடைசி வரை களத்தில் இருந்தார்.

 

இந்நிலையில் போட்டி முடிவை எட்டியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் ஓடிவந்த விராட் கோலியை கட்டித்தழுவி தனது பாராட்டை தெரிவித்தார். அதேபோல் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் கண்ணீர் மல்க இந்த வெற்றியை சக வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடய செய்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement