
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 64 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 44 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மிகவும் அபாரமாக பந்து வீசி 12 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 6- வது போட்டியில் ஆடிய அவருக்கு இது சிறந்த பந்துவீச்சாகும்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக புனே மைதானத்தில் 54 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், யசுவேந்திர சாஹல், வாஷிங் டன் சுந்தர், தீபக்ஹூடா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.