
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று அதில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற ஜூன் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விமர்சனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து பல்வேறு கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடத்தி வருகின்றனர். அதில் எந்த அணி பலம்மிக்கது? யார் பைனலில் வென்று சாம்பியன் பட்டம் வெல்வார்? இந்திய அணிக்கு யார் சிறப்பாக செயல்படுவார்? என்கிற ஏராளமான கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் பைனல் இங்கிலாந்தில் நடப்பதால், ஆஸ்திரேலிய அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்னும் கருத்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.