Advertisement
Advertisement
Advertisement

இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!

எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 03, 2024 • 09:49 AM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 03, 2024 • 09:49 AM

மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Trending

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற தங்களது கணிப்புகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் தற்போதுள்ள வீரர்கள் என அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்சமயம் அவர்களது வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதால் வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “இத்தொடரில் விளையாடுவது மிகவும் உற்சாகமாக உள்ளது. இது ஒரு சிறந்த தொடராக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஏனெனில் சமீப காலங்களில் இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அதோபோல்  கடந்த இரண்டு வருடங்களாக நாங்களும் நன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். மேலும் கடைசி இரண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இழந்துள்ளோம். ஆனால் இம்முறை அதனை மாற்றியமைத்து தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளோம். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் அவர்கள் ஒரு அற்புதமான அணியாக உள்ளனர். அவர்களிடம் சமநிலையான அணி உள்ளது. அவர்களிடம் அனைத்து ஃபார்மெட்களிலும் விளையாடும் வீரர்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இங்கு சிறப்பான கிரிக்கெட்டையும் விளையாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இந்தியாவிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதனால் அங்கு அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் எங்கள் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்த ஆர்வமுடன் உள்ளோம். எனவே இது மிகப்பெரும் எதிர்பார்புடைய தொடராக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement