
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி 10 நாள்களுக்கு முன்னரே ஆஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.
அதன்படி இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி என 3 வீரர்களும் பேட்டிங் செய்யவில்லை. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2ஆவது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆர்ஷ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளே முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் ஹாப்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.