
India have still never beaten England at the Women's T20 World Cup! (Image Source: Google)
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் எமி ஜோன்ஸ் 40 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 28 ரன்களும் எடுத்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.