
நேற்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணி 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் சேர்ந்து ஆட்டம் இழக்காமல் 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக உடைத்து விட்டார்கள். சிறப்பாக விளையாடிய ஹெட் 146 ரன்கள் உடனும், ஸ்மித் 95 ரன்கள் உடனும் களத்தில் இருக்கிறார்கள். நேற்றைய இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஒழுக்கம் சரியாக அமையவில்லை. நிலைமைக்குத் தகுந்தவாறு பந்தை வீசாமல் அவர்களது விருப்பம் போல் வீசியதாக இருந்தது.
இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ” இங்கிலாந்தில் பேட்டிங் செய்வதற்கு ஓவல் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்கலாம். ஆட்டம் தொடரும்பொழுது இன்னும் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கும். இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்ய இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். கில் மற்றும் கோலி இருவரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். வானிலை சீராகிவிட்டது மேகமூட்டமும் இல்லை.