
India lose their fifth as South Africa gain control in Perth! (Image Source: Google)
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின், இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி பெர்த்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போட்டியில் கிடைக்கப் போகும் வெற்றி, தோல்விதான் மூன்று அணிகளின் அரையிறுதி வாய்ப்பை கிட்டதிட்ட உறுதி செய்யும்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவும், தென் ஆப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடியும் சேர்க்கப்பட்டனர்.