-mdl.jpg)
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை எல்லா அணிகளும் அறிவிப்பதற்கான கடைசி நாள் இன்று. இன்றைய நாள் இரவு 12 மணி வரைக்கும் அதற்கான நேரம் இருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இறுதி அணியை அறிவிக்காத அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இருந்து வந்தன.
ஆஸ்திரேலியா அணி இன்று தனது 15 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை அறிவித்தது. அந்த அணியில் ஒரே ஒரு பிரதான சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஸாம்பா மட்டும் இடம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் இந்திய அணி தமது உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான உலகக் கோப்பை இறுதி அணியை எப்பொழுது அறிவிக்கும் என்று இந்தியர்கள் தாண்டி கிரிக்கெட் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாறு உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி இந்திய தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.