
INDIA ‘No reason to change winning combination’ – Virat Kohli (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான் மூன்றாவது டெஸ்ட் லீட்ஸில் நாளை தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதன்படி முதல் டெஸ்டில் விளையாடியபோது காயமடைந்த ஷர்துல் தாக்கூர், 2ஆவது டெஸ்டிலிருந்து விலகினார். நான்கு வேகப்பந்து வீச்சாளர் + ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்கிற கூட்டணியே இந்தத் தொடரில் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தகவல் தெரிவித்தார். இதனால் 2ஆவது டெஸ்டில் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசினார்.