1-mdl.jpg)
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான கிரிக்கெட் அரையிறுதிச்சிற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் விளையாடியது. இதில், 20 ஓவர்களில் அந்த அணி மொத்தமாக 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் 24 ரன்களும், தொடக்க வீரர் பர்வேஸ் ஹூசைன் எமான் 23 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியைப் பொறுத்த வரையில், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இவர்களுடன் இணைந்து அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில், திலக் வர்மா, 26 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.