
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த த்ரில் வெற்றிகளை பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று இரவு 7 மணிக்கு சம்பிரதாயமாக 3வது போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிகர் தவான் – சுப்மன் கில் தொடக்க ஜோடி மீண்டும் ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தது. ஏற்கனவே தொடரை இழந்த சோர்வில் சுமாராக பந்துவீசிய வெஸ்ட் இண்டீசை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது 7 பவுண்டரியுடன் 58 (74) ரன்களில் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.
அதனால் 24 ஓவரில் 115/1 ரன்களை எடுத்து இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கி ஓய்ந்த நிலையில், போட்டியை தொடங்கியபோது மீண்டும் வந்தது. ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து மழை நின்றதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கிய போது 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – கில் உடன் இணைந்து மீண்டும் 82 பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.