Advertisement
Advertisement
Advertisement

பிளேயிங் லெவனில் ஷமிக்கு இடமில்லாதது ஏன் - பரஸ் ஹம்ப்ரே விளக்கம்! 

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே வெளியிட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2023 • 20:39 PM
பிளேயிங் லெவனில் ஷமிக்கு இடமில்லாதது ஏன் - பரஸ் ஹம்ப்ரே விளக்கம்! 
பிளேயிங் லெவனில் ஷமிக்கு இடமில்லாதது ஏன் - பரஸ் ஹம்ப்ரே விளக்கம்!  (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணியையும் எதிர்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் மிக மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்பின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி, அப்போட்டியில் பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், குல்தீப் யாதவ், ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

Trending


இந்தநிலையில், நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்ட இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரஸ் ஹம்ப்ரே, சீனியர் வீரரான முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்கானித்து வந்தோம். பும்ராஹ் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் நான்கு சிறப்பான பந்துவீச்சாளர்களும் மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டனர், இதனால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான் அதே போன்று  போட்டியின் தேவைக்கு ஏற்ப வீரர்களை பயன்படுத்தி கொள்வதற்கும் இது எங்களுக்கு உதவியாக உள்ளது. 

முகமது ஷமி போன்ற சிறந்த வீரர் ஒருவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க முடியாதது சாதரண விசயம் கிடையாது. இது நாங்கள் எடுத்த கடினமான முடிவு தான். முகமது ஷமி இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்தவர், ஆனால் அணியின் தேவை அனைத்தை விட முக்கியமானது. இது எங்கள் வீரர்கள் அனைவருக்கும் தெரியும். அணியின் தேவையை கருத்தில் கொண்டே வீரர்களையும், ஆடும் லெவனையும் தேர்வு செய்வோம்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement