
Indian cricket team unhappy with after-practice food in Sydney (Image Source: Google)
ஐசிசிக்கு கிடைக்கும் வருமானத்திற்கு முக்கிய காரணமே இந்திய கிரிக்கெட் அணி தான். ஆனால் இந்திய வீரர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை ஐசிசி செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, இந்திய அணி அடுத்த போட்டியில் நெதர்லாந்துடன் மோதுவதற்காக சிட்னி வந்துள்ளது. சிட்னியில் நேற்று பயிற்சி முகாமில், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த தொடரை ஐசிசி நடத்துவதால், ஹோட்டல் அறைகள் முதல் போக்குவரத்து வரை அனைத்து ஏற்பாடுகளையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தான் மேற்கொள்ளும். இந்திய அணி உள்ளிட்ட தொடரில் பங்கேற்கும் 16 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு உணவு, தண்ணீர் என அனைத்தையும் ஐசிசி தான் செய்ய வேண்டும்.