
Indian Cricketers in England to Receive Second Dose of COVID-19 Vaccine (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் மும்பையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர். அதன்பின் அவர்கள் 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் வருகிற ஜூம் 14ஆம் தேதி லண்டனில் ஒன்றுகூடுகிறார்கள். பின்னர் டர்ஹாமுக்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளனர்.