Advertisement
Advertisement
Advertisement

இலங்கை கிரிக்கெட் தொடர்; இன்று இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு!

இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Indian team for the Sri Lanka series is likely to announce by today evening!
Indian team for the Sri Lanka series is likely to announce by today evening! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 27, 2022 • 01:04 PM

வரும் 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்டு தொடரில் விளையாட உள்ளது. டி20 போட்டி வரும் மூன்றாம் தேதி தொடங்க உள்ள நிலையில் அந்தத் தொடருக்கான இந்திய அணியை சேட்டன் சர்மா தலைமையிலான பழைய தேர்வு குழு உறுப்பினர்கள் அறிவிக்க உள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 27, 2022 • 01:04 PM

புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், இன்று மாலை இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து குணமடைந்த நிலையில், தொடர்ந்து 6 ஒருநாள் போட்டி நடைபெறுவதால், அவருக்கு டி20 போட்டியில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரும் முடிந்து இரண்டு நாட்களிலேயே நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரும் நடைபெறுகிறது. இதனால் இந்திய அணி தொடர்ந்து ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால் டி20க்கு தனி அணியையும் ஒரு நாள் போட்டிக்கு தனி அணியையும் உருவாக்கும் முடிவில் தேர்வுக் குழுவினர் உள்ளனர்.

இதனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக டி20 போட்டிக்கு செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய உள்ள பல சீனியர்கள் டி20 அணியில் விளையாட வாய்ப்பு இல்லை. அதற்கு பதிலாக ஒரு நாள் தொடர் தொடங்கியவுடன் சீனியர்கள் அணிக்கு திரும்ப உள்ளனர். 

மேலும் இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா,தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் காயத்திலிருந்து குணமடைந்தாலும் அவர் அணிக்கு திரும்புவது அவசரம் காட்ட பிசிசிஐ விரும்பாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழு உடல் தகுதியை பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி இடம் பெறுவார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் போன்ற நட்சத்திர வீரர்கள் டி20 அணியில் இடம் பெறுவது சந்தேகமே.

எனினும் அவர்கள் ஒருநாள் தொடருக்கு திரும்பி வந்துவிடுவார்கள். ஒரு நாள் தொடரும் முடிந்தவுடன் டி20 போட்டிகள் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. அதில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். அந்த தொடரும் முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் மிக முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement