
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை இரவு ட்ரினிடாட் நகரத்தில் தொடங்கவுள்ளது.
இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷிகர் தவான் தலைமையிலான இளம் படையை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சமீபத்தில் அந்நாட்டிற்கு சென்றடைந்த வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சி தொடங்கியவுடனே சோதனை வந்துள்ளது. போட்டி நடைபெறும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரத்தில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை குறுக்கிட்டு கொண்டே உள்ளது. இன்று காலையும் மழைப்பொழிவு குறையாத காரணத்தால் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழல் உருவானது.