
Intent Was To Score Runs Not Survive, Says Rohit Sharma (Image Source: Google)
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்தது. இதில் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்னும், டேவிட் மலான் 70 ரன்னும், ஹசிப் ஹமீது 68 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
அதன்பின் 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 91 ரன்னுடனும், கேப்டன் விராட் கோலி 45 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.