Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சு; இமாலய இலக்கை நிர்ணயிக்குமா பஞ்சாப் கிங்ஸ்?

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 16, 2021 • 19:08 PM
Chennai Super Kings opt to bowl
Chennai Super Kings opt to bowl (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி  வருகிறது.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

Trending


இன்றைய போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் தனது 200 வது போட்டியில் களமிறங்குகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார்.

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், அர்ஷ்தீப் சிங், முகமது சமி, முருகன் அஸ்வின்..
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement