
IPL 2021: CSK are in their 9th IPL final (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ரன்களையும், ரிஷப் பந்த் 51 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.