ஐபிஎல் 2021: கோலி, படிக்கல் அதிரடி; சிஎஸ்கேவிற்கு 157 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று நடபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஏபிடி வில்லியர்ஸ் 12 ரன்களில் ஷர்துல் தாக்கூரிடம் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூரிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு156 ரன்களை இலக்காக நிர்ணயித்து. சிஎஸ்கே அணி தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now