
IPL 2021: KKR beat Delhi Capitals by 3 Wickets and reach their 3rd IPL Final (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாம் தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 33 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.