Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: கேகேஆர் பந்துவீச்சில் சுருண்ட பஞ்சாப்; கேகேஆருக்கு 124 ரன்கள் இலக்கு!

கேகேஆர் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 124 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
IPL 2021: PBKS set a target on 123
IPL 2021: PBKS set a target on 123 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 26, 2021 • 09:17 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி, பஞ்சாப் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 26, 2021 • 09:17 PM

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இணை களமிறங்கியது. இதில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்ல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Trending

அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடா, நிக்கோலஸ், பூரான் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வாலும் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து கேகேஆர் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். கடைசி ஓவர்களில் கிறிஸ் ஜோர்டன் ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement