
IPL 2021: Punjab Kings beat KKR by 5 wickets and they alive the Play Off Chance (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 67 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.