ஐபிஎல் 2021: ரோஹித் அதிரடியில் பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச மூடிவுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு வழக்கம்போல் டி காக், இஷான் கிஷான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 33 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்த ரோஹித் சர்மாவும் 63 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சரிவர சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now