
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 147/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் இலக்கை அடைந்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருப்பினும், அவருக்கு நான்காவது ஓவர் வழங்கப்படவில்லை. மாறாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸிற்கு ஒரு ஓவர் வழங்கப்பட்டது. ஸ்டாய்னிஸ் சொதப்பலாக பந்துவீசியதால் அந்த ஒரு ஓவரில் 15 ரன்கள் வரை போனது. இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஸ்டாய்னிஸிற்கு ஓவர் கொடுக்கப்படாமல், அஸ்வின் 4 ஓவர்கள் வீசியிருந்தால் டெல்லி அணி நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.